கோவை சிறையில் சவுக்கு சங்கருக்கு அச்சுறுத்தல்

யூ டியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் கமலா, அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-09 16:34 GMT

சவுக்கு சங்கர்

சிறையில் தாக்குதல் நடத்தியது குறித்து நீதிவிசாரணை கோரி சங்கரின் தாய் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தது நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு.

சிறையில் சவுக்கு சங்கரை விசாரித்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது, அதில் காயங்களை விவரித்து சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிக்கையை ஏற்று உரிய சிகிச்சை வழங்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சிறை மாற்ற கோரி சவுக்கு சங்கர் தாய் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என சங்கர் தாயார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News