அமெரிக்காவில் வாய் சண்டையால் துப்பாக்கிச் சூடு வன்முறை!

Update: 2024-09-02 09:30 GMT

 துப்பாக்கி சூடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமெரிக்காவில் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையால் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமுற்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணம். தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. எனினும் அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News