கச்சத்தீவை இந்தியாவுக்கு கிடையாது : இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Update: 2024-04-05 10:29 GMT

டக்ளஸ் தேவானந்தா

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்சைகள் இந்தியாவில் நடந்து வரும் நிலையில் கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை என இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதிலிருந்து பல்வேறு சர்சைகளும் அதனை வைத்து பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் பல்வேறு தரப்பினரும் கட்சதீவை மீட்டெடுப்போம் என கூறி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ''கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் கச்சத்தீவை இந்தியாவிற்கு திருப்பிக் கொடுக்கும் எந்தவொரு எண்ணமும் இலங்கைக்கு இல்லை'' என்றும் கூறியுள்ளார்.

Tags:    

Similar News