சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - 4 பேர் பலி !!

Update: 2024-09-09 06:51 GMT

வான்வழி தாக்குதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாகவும் இந்த தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹிமாஸ் அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது. லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால், சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News