குவைத் தீவிபத்து த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்...!

Update: 2024-06-13 10:50 GMT

விஜய்

குவைத், மங்கஃப் நகரத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், ''குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்''. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News