வங்கத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி பலி

Update: 2024-03-01 09:51 GMT

 தீ விபத்து

வங்கதேச தலைநகர் டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் செயல்பட்டு வந்த ரெஸ்டாரன்டில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவிய நிலையில் உணவகங்கள், துணிக் கடைகள் என தீ இன்னும் எளிதாகப் பற்றிப் பரவியது.

30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை மீட்டனர். அதில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பலர் காயமடைந்த நிலையில் உள்ளனர். சடலங்கள் பல அடையாளம் காண இயலாத அளவுக்கு எரிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

Tags:    

Similar News