ஏமனில் தொடரும் போர்! தொடர்கதையாகும் விபத்துகள்..! படகு மூழ்கி 49 பேர் பலி!

Update: 2024-06-12 07:27 GMT

படகு மூழ்கி விபத்து 

சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள், எத்தியோப்பியர்களை ஏற்றிச் சென்ற படகு ஏடன் வளைகுடா வழியாக பயணமானபோது, ஏமனின் தெற்கு கடற்கரையில் திங்கள்கிழமை மூழ்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஏமனில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. என்றாலும், அங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கி விபத்து எற்பட்டுய்ள்ளது.

இந்த விபத்தில் 31 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்ததாகவும், இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காணாமல் போன 140 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐ.நா-வின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News