கோவிலில் கட்டுமானப் பணி துவக்கம்

கோவிலில் கட்டுமானப் பணி துவக்கம்

சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிய கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விேஷச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். பக்தர்களின் வசதிக்காக, கூடுதலாக கழிவறைகள் நிறுவ, 38 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும் அர்ச்சகர் குடியிருப்புநிறுவ, 22.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மேற்கண்ட இரு கட்டுமானத்திற்கான பூமி பூஜை நேற்று சிறுவாபுரி முருகன் கோவில் வளாகத்தில் நடந்தது. ஹிந்து சமய அறநிலைய துறை வேலுார் மண்டல இணை ஆணையர் விஜயா தலைமையில் நடந்த நிகழ்வில், செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பணி நடைபெறும் இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டன.

Tags

  • 1
  • 2

  • Next Story