ஷாட்ஸ்

புதுச்சேரி ஜிப்மரில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.10, 14, 18ம் தேதிகளில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை தினமான 3 நாட்களும் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத போதகர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு!!

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூட போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 மே 21ல் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

நியோ மேக்ஸ் மோசடி.. நிலத்தை பிரித்துத் தர குழு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமின், முன் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு நிலத்தை பிரித்துத் தர அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத்துறை, நகர திட்டமிடல் இயக்குநரக அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்படும். மனுதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின் ஆலோசனைகளை பதில் மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முதலீட்டு பணம் விரைவில் திரும்ப கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் குழு செயல்படும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி மே.9ல் பொதுத்தேர்வு முடிவு: அரசு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 9ம் தேதி வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி!!

 வளையப்பட்டி அருகே ஆண்டார்புரத்தில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கி சுஜித் (5), ஐவிழி (4), அவர்களை காப்பற்ற முயன்ற களஞ்சியம் (50) என்பவரும் உயிரிழந்தார். நிலத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் பலியாகினர்.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!!

அமெரிக்க அதிபரின் அதிரடி வரி விதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்ததால் பெரும் சரிவு சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,227 புள்ளிகள் சரிந்து 73,138 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியபோது 3,940 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ் படிப்படியாக மீண்டது. வர்த்தக நேரம் முடிவில் 1,700 புள்ளிகள் மீட்சி பெற்று 2,227 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் முடிவடைந்தது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 743 புள்ளிகள் சரிந்து 22,162 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. வர்த்தகம் தொடங்கியபோது 1,160 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 21,744 புள்ளிகளாகச் சரிந்திருந்தது. எனினும் வர்த்தக நேரம் முடியும்போது 400 புள்ளிகள் வரை மீட்சி பெற்று நிஃப்டி 743 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.

சிலிமனைட் கனிமம் மீதான வரி ரூ.7,000ஆக நிர்ணயம்: தமிழ்நாடு அரசு

கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான அதிகபட்ச வரியாக சிலிமளைட் கனிமம் டன் ஒன்றுக்கு ரூ.7,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வரியாக களிமண் கனிமத்துக்கு டன் ஒன்றுக்கு ரூ.40ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. கனிம வளங்கள் கொண்ட நிலங்கள் மீதான வரியால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,400 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

சமையல் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக: செல்வப்பெருந்தகை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்வதே இல்லை.சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ள பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.

மாயையை உடைத்துவிட்டார் டிரம்ப், உண்மை சுடத் தொடங்கிவிட்டது; மோடியை எங்கும் காணவில்லை: ராகுல் காந்தி

மாயையை உடைத்துவிட்டார் டிரம்ப், உண்மை சுடத் தொடங்கிவிட்டது; மோடியை எங்கும் காணவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். உண்மையை இந்தியா ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மீண்டெழக் கூடிய பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கக் கூடிய உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு.!!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயுவை குறைந்த விலையில் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.41,338 கோடி இழப்பு என அமைச்சர் விளக்கம் அளித்தார். எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

குணால் கம்ராவின் இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு!!

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நடிகர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் குணால் கமராவின் இடைக்கால முன்ஜாமினை 17ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மும்பை ஐகோர்ட்-ஐ அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு குணால் கம்ராவுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

லால்குடி பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

லால்குடி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது. இருந்த போதும் தற்போது லால்குடி பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது!!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சிபிஐ அதிகாரி எனக்கூறி பெண்ணிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரி எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பிஜூ (44) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையும். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்குள் ஆஜராக உத்தரவு!!

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜராகாத நிலையில் மாலை 5 மணிக்குள் ஆஜராக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது!!

திண்டுக்கல்லில் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ரூ.500 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட சண்முகம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை: அமைச்சர் ரகுபதி

இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையால் கடந்த காலத்தில் 3684 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 613 படகுகள் சிறைபிடிப்பு. இலங்கை சிறையில் வாடும் எஞ்சிய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரூ.576 கோடிக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். சேதமடைந்த படகுகளுக்கு நிதியுதவி அளித்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் தெரிவித்தார்.

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33ஆக உயர்த்துக: அன்புமணி

சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை 33ஆக உயர்த்த வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 35, பட்டியலினத்தவர்களுக்கு 38-ஆக உயர்த்த வேண்டும். சார் ஆய்வாளர்கள் காலிபணியிடங்களின் எண்ணிக்கையை 2000-ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

ரூ.25 கோடியில் 7 வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

ரூ.25 கோடியில் 7 வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நெல்லை மற்றும் கடலூரில் தலா ரூ.6 கோடியில் உர தரக்கட்டுப்பாடு அமைக்கப்படும். தரமான விதைகள் கிடைக்கும் வகையில் குறு வட்ட அளவில் செயல்படும் மையங்களில் ரூ.3 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது?: நீதிபதிகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை ஏன் தாமதமாகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை. 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் உயிரிழந்தார்.