- Home
- /
- ஷாட்ஸ்

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது. மாற்று வழி என்ன என்பது குறித்து கோயில் இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகளை முறையாக மீட்டு பராமரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் கூடுதல் ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். பருவமழையால் மழையில் நெல் நனைந்துள்ளதால் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து 3 குழுக்களை மத்திய அரசு அனுப்பியது.

பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில், நெல் கொள்முதல் குறித்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீரில் மூழ்கிய பயிர்களில் 33%, அதற்கு மேல் சேதம் ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில் மழையால் பழுதடையும் சாலைகளை உடனுக்குடன் சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார பாக்ஸ்கள், கேபிள்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றைய விலை நிலவரம் எப்படி இருக்குமோ என இல்லத்தரசிகள் திகிலுடன் காத்திருந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்தது. சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையானது . அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்தது. இந்த நிலையில், தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.92,000-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடு குறைந்ததன் எதிரொலியாக அதன் விலை சரிவை சந்தித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் மளமளவென குறைந்து வருகிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி. இவருக்கு வயது 74. இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், பொன்னுசாமி சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆவின் டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி ஞானசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆவின் பால் விநியோக வாகன டெண்டரில் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் உத்தரவாதத்தை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தார். பெரம்பூரில் சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி ரித்திகா(16) உயிரிழந்தார்.ஓட்டேரியில் சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் புதுப்பேட்டை மெக்கானிக் இக்ரம் உசேன் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த இளம்பெண் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலையில் இருந்து தங்கத்தகடுகளை எடுத்துச் செல்ல ஆவணங்களை கொடுத்தார் என்பது முராரி மீதான குற்றச்சாட்டு. துவார பாலகர் சிலையில் இருந்த தங்கம் திருட்டு தொடர்பான வழக்கில் 2வது எதிரியாக முராரி பாபு சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். சமூக வலைதளங்களில் வரும் புகார்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்கிறோம். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு வரும் புகார்கள் அடிப்படையில் ஆய்வு செய்தார். காவிரி படுகை மாவட்டங்களுக்கு அமைச்சர்களை முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.










