சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு | தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் மகாலட்சுமியை நேரில் அழைத்துப் பாராட்டு | கிங் நியூஸ் 24x7
Update: 2025-02-17 09:40 GMT

அருண் IPS
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுகொடுத்த வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தந்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலட்சுமியை நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண்.