மண்பானைத் தண்ணீரில் கூட நன்மை இருக்கா !!

Update: 2024-05-30 12:00 GMT

மண்பானைத் தண்ணீர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மண்பானை எனப்படுவது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் ஒரு பாத்திரம் ஆகும். இந்த பானையில் தண்ணீர் சேமித்து குடித்து வர பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மண்பானைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால் இயற்கை முறையில் தண்ணீர் குளிர்விக்கப்படுகிறது.

ரேப்ரிஜிரேட்டர் போன்ற சாதனங்களில் ரசானங்களின் உதவியோடு குளிர்விக்கப்படும் தண்ணீர் உடலுக்கு கேடு விளைவிக்கும். களிமண்கள் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டதாக இருப்பதால் சேமித்து வைக்கப்படும் தண்ணீரின் pH அளவு சமநிலைப்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. மண்பானையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் இயற்கை தாதுக்கள் நிறைந்துள்ளது. எனவே தினம் மண் பானை தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.

மண்பானை தண்ணீரில் உள்ள இயற்கை தாதுக்கள் அதிகளவு உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. குறிப்பாக வெயில் காலங்களில் ஏற்படும் மலச்சிக்கல், கண் எரிச்சல், வாய் புண் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. மண்பானை தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை தாதுக்கள் நம் உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

மேலும் காயங்களால் ஏற்படும் பக்க விளைவுகளையும் இது தடுக்கிறது. ரேப்ரீஜிரேட்டர் போன்ற சாதனங்களில் குளிர்விக்கப்படும் தண்ணீரை குடிக்கும் போது தொண்டை பகுதியில் எரிச்சல் போன்ற உபாதை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க மண்பானை தண்ணீரை குடிக்கலாம். மண்பானைகள் தண்ணீரை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்கிறது.

தண்ணீரில் உள்ள அசுத்தங்களை நீக்குவதோடு நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடுவதிலும் உதவுகிறது. மண்பானையில் வைக்கப்படும் தண்ணீரில் இயற்கை தாதுக்களை தவிர ரசாயனங்கள் எதுவும் இல்லை. இதன் காரணமாக மண்பானை தண்ணீர் நம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

Tags:    

Similar News