கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து - பினராயி விஜயன்

Update: 2024-07-30 09:00 GMT

பினராயி விஜயன்

கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 500 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வயநாடு சூரல்மலை மீட்புப் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.


Tags:    

Similar News