பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Update: 2024-07-23 06:05 GMT

நிர்மலா சீதாராமன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், 2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் உரையைத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், இந்திய மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்ட நம்பிக்கையில் அமோக ஆதரவு தந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவைத்துள்ளனர் என்றார்.

நாட்டின் பணவீக்கம் குறைவாகவே உள்ளது.

வேலைவாய்ப்பு, கல்வித்திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.

80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.

9 முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

இந்தியாவின் பொருளாதாரம் வரும் காலங்களிலும் சிறப்பாக இருக்கும்; பணவீக்கம் 4% என்ற இலக்கை நோக்கி நகரும்.

கல்விக் கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.

உற்பத்தி துறையில் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு.

பீகாரில் சாலைகள், பாலங்கள் கட்ட 26,000 கோடி ஒருக்கீடு

ஆந்திர மாநிலத்துக்கு 15,000 கோடி ஒதுக்கீடு.

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் அரசு ஊதியம் வழங்கப்படும்.

EPFO பதிவு செய்த இளைஞர்களுக்கு 15,000 முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் மாத ஊதியம் ரூ.1 லட்ச்த்துக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள்.

கிராம அளவில் பயோ உரங்கள் வழங்கப்படும்.

கடுகு, எள், சூரிய காந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துது பயிர்களின் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.

காய்கறி விற்பனை தொடர் சங்கிலி உருவாக்கப்படும்.

வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும்

ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு.

டிஜிட்டல் பயிர் சாகுபடி முறை பின்பற்றப்படும்.

டிஜிட்டல் முறையில் கரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் சர்வே செய்யப்படும்.

1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்க மாற்றப்படுவார்கள்.

கல்வி, தொழில்திறன் மேம்பாட்டுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு


Live Updates
2024-07-23 06:21 GMT

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்துக்கு மட்டுமே ரூ.2.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி 2.0 திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்.

1 கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சார வசதி அமைக்கப்படும்.

கம்பெனிகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த வழக்குகளை கையாள புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும்.

Tags:    

Similar News