காங்கிரஸ் மெளனம் காப்பது ஏன்? கார்கேவுக்கு நட்டா கேள்வி!

Update: 2024-06-24 10:03 GMT

நட்டா - கார்கே

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்தும் காங்கிரஸ் மெளனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி நாடு முழுக்க அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது. சுமார் 100க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் நட்டா கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி அமைதி காக்கிறது. காங்., அமைதி காப்பது ஏன்?. ஏராளமான பட்டியல் இனத்தவர்கள் உயிரிழந்துள்ள போதும், காங்கிரஸ் மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தாமல் இருப்பது ஏன்?. முதல்வர் ஸ்டாலின் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.

அமைச்சர் முத்துசாமியை நீக்குவதோடு, முதல்வர் ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் மீது பழி போடுவது வெந்த புண்ணில் உப்பை தடவுவதாக உள்ளது. ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News