பிரதமர் மோடிக்கு எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் வாழ்த்து!

Update: 2024-06-08 04:52 GMT

எலான் மஸ்க்

3வது முறையாக நாளை பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி பழைய நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அதனை பிற தலைவர்கள் வழிமொழிந்தனர். அதன்பிறகு நரேந்திர மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர் அனுமதி வழங்கி உள்ளார். இதையடுத்து நாளை இரவு ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் நரேந்திர மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இது தொடர்பாக டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் தனது ‛‛எக்ஸ்'' தளத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் இன்னும் சிறப்பான பணிகளை செய்யும் காலத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News