அரசு வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் பணம் பெற்று மோசடி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரசு வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும்நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-10 16:13 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தஞ்சாக்கூரை சேர்ந்தவர் கருப்பு. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அய்யாச்சாமி மகன் பாலசுப்பிரமணியன் என்பவர் ரூபாய் 1 லட்சம் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ஏமாற்றியதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மூன்று தவணைகளாக ரூபாய் 85 ஆயிரம் வரை பணத்தை செலுத்திய நிலையில் மீதமுள்ள 15 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டதற்கு தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கருப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.