ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டி போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பாக சிஐடி யுவினர் துப்புரவு தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Update: 2024-07-22 06:11 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU - சங்கத்தினர் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஊராட்சிகளில் பணிபுரியும் OHT தொழிலாளர்களுக்கு பணி நியமனம் துப்புரவுப் பணியில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் காலமுறை ஊதியம் போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News