குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் தொண்டர்கள் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி அழைப்பு

Update: 2024-07-22 16:10 GMT
மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து முன்னால் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் இன்று காலை சுமார் 10 மணியளவில் குமாரபாளையம் பள்ளி பாளையம் பிரிவு சாலையில் நடைபெற உள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி .பேரூராட்சி.நகரம் .கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள அதிமுகவின் கழக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட செயலாளருமான முன்னாள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்க ஆயத் தீர்வு துறை அமைச்சர் தங்கமணி அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1500க்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Similar News