சுடுகாடு பாதை அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

ஆர்ப்பாட்டம்

Update: 2024-07-25 06:41 GMT
சுடுகாடு பாதை அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மேலப்பந்தை கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதி புதிய காலணியில் சுடுகாடு பாதை அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் காட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் செல்வன், மாவட்ட செயலாளர் காசிநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்துக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர். இதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் கிட்டு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் மற்றும் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News