மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்*

காவல் ஆணையர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

Update: 2024-07-31 14:39 GMT
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் புதிதாக 51 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இதுவரை தீர்வு காணப்படாத சிறு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள், குடும்பபிரச்சனைகள், வாய்தகராறு பிரச்சனைகள், மற்றும் பிற பிரச்சனைகள் சம்மந்தப்பட்ட 265 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

Similar News