மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

பள்ளிபாளையம் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

Update: 2024-08-02 12:24 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெடியரசம்பாளையம் பகுதியில் ,கொங்கு கலையரங்கத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது . இதில் எரிசக்தி துறை, மின்சார வாரியம், வேளாண்துறை, உழவர் நலத்துறை, காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என பல்வேறு துறைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இ பொது சேவை மையம் முகாமில், படிப்பு சான்றிதழ் ,இருப்பிட சான்றிதழ் ,முதல் பட்டதாரி சான்றிதழ், வங்கி கணக்கு துவக்குதல்,ஆதார் சேவைகள் , பட்டா மாறுதல் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.

Similar News