வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

குமாரபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2024-08-02 15:14 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதிவதனி, 29. இவரது கணவர் அம்சமணி, 37. பெருந்துறை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 09:30 மணியளவில் அம்சமணி வேலைக்கு போக, குழந்தைகள் பள்ளிக்கு போக, மாமனார் சுப்பிரமணி, 65, மாமியார் செல்லம்மாள், 62, இருவரும உறவினர் துக்க வீட்டிற்கு சென்றனர். மதிவதனி மாடுகள் மேய்க்க சென்றார். காலை 11:00 மணியளவில் மாமியார் செல்லமால் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது, கிரில் கதவு, வீட்டின் கதவு திறந்த நிலையிலும் இருந்தது கண்டு அதிர்சியடைந்தார். இது குறித்து மதிவதனிக்கு தகவல் தர வீட்டின் உள்ளே சென்ற இருவரும் , பீரோ திறந்து கிடப்பதையும், துணி,மணிகள் சிதறி கிடப்பதையும் கண்டனர். உறங்கும் கட்டிலின் அடிப்பகுதியில் வைத்த 7 ¾ பவுன் தங்க தாலிக்கொடி, சாமி படத்தின் பின்புறம் வைத்திருந்த 8 ஆயிரம் ரொக்கம், கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகிய திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மதிவதனி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News