பள்ளிபாளையத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது..

பள்ளிபாளையம் கோவில் திருவிழாவில் அந்தரத்தில் தொங்கியபடியே அலகு குத்தி வந்த பக்தர்

Update: 2024-08-03 12:57 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் எலந்த குட்டை கிராமம் வெப்படை காந்திநகர் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் மூன்றாம் தேதி பூச்சாட்டுகளுடன் திருவிழா துவங்கியது. ஆடி பதினேழாம் நாள் காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று, சனிக்கிழமையன்று மாவிளக்கு, அக்னி சட்டி, அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது . இதில் ஒரு பகுதியாக அலகு குத்தும் விழா நிகழ்ச்சியில் பக்தர் ஒருவர் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் அலகு குத்தி தொங்கியபடியே வந்தார். பக்தர்கள், பொதுமக்கள் பயபக்தியுடன் கும்பிட்டனர். தொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்தல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் நடைபெற்றது.

Similar News