கோவில் திருவிழா விசேஷ நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

உள்ளூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் விசேஷ வழிபாடு மேற்கொண்டார்

Update: 2024-08-03 13:14 GMT
ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு முனியப்பன் திருக்கோவில், ஆவரங்காடு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் , ஆர்.எஸ்.ரோடு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களில், முன்னாள் மின்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றார் . இதனை நிகழ்வில் பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி, ஒன்றிய செயலாளர் சேர்மன் எஸ்.செந்தில், நகர பொருளாளர் சிவக்குமார் , நகர மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா, வைத்தீஸ்வரன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Similar News