வல்வில் ஓரி மன்னனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

பள்ளிபாளையம் அருகில் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஒரு மன்னனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் பலர் பங்கேற்றனர்

Update: 2024-08-04 13:07 GMT
கொல்லிமலையை ஆண்ட மாமன்னன் வல்வில் ஓரிக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கொல்லிமலை செம்மேடு பகுதியில் வல்ஓரி மன்னன் சிலைக்கு ஏராளமான சமூக அமைப்பு சேர்ந்தவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதனையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் அருகே வல்வில் ஓரி நண்பர்கள் குழு சார்பில், நடைபெற்ற நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டு, மாமன்னன் வல்வில் ஓரி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Similar News