அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது

தூய்மை சுகாதாரம் குறித்து அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-08-06 12:44 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் விழிப்புணர்வு பிரச்சார கலைக்குழு சார்பில் கிராமிய கலைக்குழு மூலமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமை வகித்தார் . இதில் சுற்றுப்புறப் பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் ,வீட்டில் பயன்படுத்தப்படும் குப்பைகளை எவ்வாறு கையாள வேண்டும் ,அதை முறையாக தூய்மை பணியாளரிடம் எவ்வகையில் ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு விஷயங்கள் கிராமிய கலைக்குழு ஆடல் பாடல் நடனம் மூலமாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் பள்ளி மேலாண்மை குழு தலைவர், மற்றும் உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள்,பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்..

Similar News