திருவரங்குளம் அறங்குலநாதர் கோவிலில் தேரோட்ட திருவிழா!

பக்தி

Update: 2024-08-07 03:56 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். இதையடுத்து தேரை பக்தர்கள் 2 வடம்பிடித்து இழுத்தனர்.விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி போலீஸார் செய்திருந்தனர்.

Similar News