அரிமளம் அருகே உள்ள மேல்நிலைப் பட்டியில் கேசவநம்பி அய்யனார் மற்றும் பொன்னாட்சி அம்மன் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.