திருமயம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு!

பொது பிரச்சனைகள்

Update: 2024-08-10 08:35 GMT
திருமயம் சந்தப்பேட்டையில் உள்ள மாதா வீதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக சாலையில் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஊராட்சி பணியாளர்களைக் கொண்டு அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News