பிரகதாம்பாள் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

பக்தி

Update: 2024-08-10 08:41 GMT
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலயத்தில் ஆடி சுக்கிர வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர் உற்சவர் நான்கு மட வீதி வழியாக சென்று மண்டபத்தில் வைக்கப்பட்டு அங்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. வந்திருந்த பக்தர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய், பழம், பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே வந்திருந்தனர்.

Similar News