கருங்காடு பகுதியில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த சரக்கு வேனை மறித்தனர். அதிகாரிகள் நிற்பதை பார்த்த டிரைவர் சரக்கு வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினார். இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.