தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் ஆலங்குடி கிளை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் பாரதி நகர் தவ்ஹீத் மர்கஸில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபியுல்லா தலைமை வகித்தார். இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ தகுதி அடிப்படையில் 24 யூனிட்கள் ரத்தம் கொடையாக பெறப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது