திருவரங்குளம் அருகே 3000ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோவில் ஆடி மாத திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் ஆதி முனீஸ்வருக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் நடைபெற்றது. இதில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று ஆதி முனீஸ்வரரை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.