திருமயம் மேட்டுதெரு பாப்பா வயல் செல்லும் பாதையில் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கூர்மையான கம்பிகள் இன்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து பாதையில் இடையூறாக இருந்த கம்பியை உடனடியாக அகற்றியதைக் கண்ட மக்கள், ஊராட்சியின் உடனடியான செயலுக்கு மிகவும் மகிழ்வுற்றனர்.