பொன்னமராவதி அடுத்த நகரப்பட்டியில் வேளாண்மைத் துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி "மாவட்டத்தின் சிறப்பு பொருட்களுக்கான மதிப்புக் கூட்டுதல்" என்ற தலைப்பில் இன்று நடத்தப்பட்டது. இதற்கு வேளாண்மை விற்பனைத்துறை அலுவலர் நிரஞ்சன் தலைமை தாங்கினார். மேலும் வேளாண் துணை அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் வேணி வரவேற்புரை ஆற்றினார்.