பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஒலியமங்கலம் ஊராட்சி சாலையை ஒரு மாத காலத்திற்குள் முடிப்பதாக கூறி வட்டாட்சியர் முன்னிலையில் சமாதான கூட்டத்தில் அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.