குறிஞ்சி மலர் அரிமா சங்கம், ரோட்டரி கிளப் ஆப் மதுரை மற்றும் மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள மனோகரா நடுநிலைப்பள்ளி இணைந்து சுதந்திர தின விழா

விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள், நோட்டு புத்தகங்கள், மற்றும் காலை உணவு ஆகியவை வழங்கப்பட்டது

Update: 2024-08-15 15:07 GMT
குறிஞ்சி மலர் அரிமா சங்கம், ரோட்டரி கிளப் ஆப் மதுரை மற்றும் மதுரை செல்லூர் பகுதியில் அமைந்துள்ள மனோகரா நடுநிலைப்பள்ளி இணைந்து 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலர் தினேஷ் பால் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தாளாளர் பா.பால் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடென்சி தலைவர் ஆனந்த் குமார் கொடியேற்றி வைத்தார். மாமன்ற உறுப்பினர் குமரவேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுதந்திர தின உரையாக பள்ளி மாணவிகள் வழங்கினர். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள், நோட்டு புத்தகங்கள், மற்றும் காலை உணவு ஆகியவை வழங்கப்பட்டது. சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் செயலர் மதிமாறன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

Similar News