அரசு பஸ்ஸை முந்தி சென்ற டூவீலர் பள்ளத்தில் விழுந்து கூலித்தொழிலாளிகள் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே அரசு பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற டூவீலர் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து கூலித் தொழிலாளிகள் இருவர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-08-18 12:12 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற டூவீலர் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து கூலித் தொழிலாளிகள் இருவர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் விஜய், 22, கூலித் தொழிலாளி. இவரும், இவரது பெரியப்பா மகன் ரவிக்குமார், 28, இருவரும், ஆக. 16ல், மாலை 06:45 மணியளவில், கோவைக்கு வேலைக்கு செல்ல வேண்டி, பஜாஜ் பல்சர் வாகனத்தை ரவிக்குமார் ஓட்ட, விஜய் பின்னால் உட்கார்ந்தவாறு சென்றனர். சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, டி.மார்ட் அருகே வந்த போது, முன்னால் சென்ற அரசு பஸ்ஸை முந்தி செல்ல முயன்ற போது, நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News