ஆலங்குடியில் உள்ள நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று ஆவணி மாத திருவோணம் மகாவிஷ்ணு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மகாவிஷ்ணுவுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் போன்ற பல்வேறு வகையான நறுமண பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மகாவிஷ்ணுவை தரிசித்து சென்றனர்.