நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கூலித் தொழிலாளி பலி

குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார்.

Update: 2024-08-21 15:55 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார். பவானி காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் திலிப்குமார், 34. மெக்கானிக் கூலி. இவர் நேற்றுமுன்தினம் பகல் 12:00 மணியளவில் தனது முதலாளியை பார்த்து விட்டு வருவதாக மனைவி பரஞ்சோதி, 32, வசம் கூறி தனது ஹீரோ ஹோண்ட ஸ்பெலெண்டர் வாகனத்தில் சென்றார். மாலை 02:15 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பகுதியில், பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதி படுகாயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 03:50 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News