கணவரை விட்டு மனைவி தன் இரு குழந்தைகளுடன் மாயம்

குமாரபாளையத்தில் கணவரை விட்டு மனைவி தன் இரு குழந்தைகளுடன் மாயமானார்.

Update: 2024-08-22 09:26 GMT
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கணவரை விட்டு மனைவி தன் இரு குழந்தைகளுடன் மாயமானார். குமாரபாளையம் சேலம் சாலையில் வசிப்பவர் ராஜ்குமார், 34. ஓட்டல் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, மேகதீபா, 24. இவர்களுக்கு முதிபா தேஜு, 2, முதித்ராஜ் பிரியன், எனும் 10 மாத குழந்தை உள்ளனர். ஆக. 16ல் காலை 09:30 மணியளவில் ராஜ்குமார் வேலைக்கு வரும் போது வீட்டில், மனைவி, குழந்தைகள் இருந்துள்ளனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் சிறிது நேரத்தில் போன் செய்து, மனைவி, உங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு சென்று விட்டார் என்று சொல்ல, வீட்டிற்கு வந்து பார்த்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News