மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு எம்பி

ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பள்ளி பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-08-22 13:10 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள பாப்பம்பாளையம் கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமானது நேற்று நடைபெற்றது. இதில் 15  -க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் சார்பில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.  பாப்பம்பாளையம் ஊராட்சி, கொக்கராயன் பேட்டை ஊராட்சி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கினர் . மேலும் இந்த நிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மின்சார வாரிய அதிகாரிகளை சந்தித்த ஈரோடு எம்பி மனுக்கள் வருகை குறித்த விவரங்களை கேட்டறிந்தார் . இந்த நிகழ்வின் போது பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன், பாப்பம்பாளையம் கொக்கராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் கிரிஜா, குமாரபாளையம் வட்டாட்சியர், அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இந்த முகாமில் பங்கேற்றனர்..

Similar News