புகையிலை பொருட்கள் பறிமுதல்,ஒருவர் கைது

பள்ளிபாளையம் அருகே 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-08-22 14:46 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், அணிமூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 31. இவர் நேற்று வெப்படை அருகே உள்ள சின்னார்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரி அருகே, நேற்று கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவ்வழியே ரோந்து சென்ற வெப்படை போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், 5 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பையில் வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, இவரை கைது செய்ததுடன், 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News