மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை.

பக்தர்களுக்கு அன்னதானம்

Update: 2024-08-23 13:47 GMT
அன்னை ஆதிபராசக்தியின் திருவருளுடனும், ஆன்மீக குரு அருள் திரு அம்மா அவர்களின் குருவருளுடனும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத்தலைவர் அருள செந்தில்குமார் அவர்களின் வழிகாட்டுதலுடன் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடநெற்குணம் கிராமத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மன்ற தலைவர் செல்வம் ஏற்பாட்டை செய்திருந்தார்கள். இதில் வேள்விக்குழு ஜான்சி, நிர்மலா, தேவகி , கார்த்திக் , முத்தமிழ், கப்பூர் கார்த்தி, மருவூர் அரசி, லட்சுமி,வர்ஷா ஆகியோர் வேள்வியை சிறப்பாக நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக சமுதாயப் பணியாக பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுக், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News