வெளி மாநில லாட்டரி விற்றதாக இருவர் கைது,

குமாரபாளையத்தில் வெளிமாநில லாட்டரி விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்

Update: 2024-08-25 03:56 GMT
நாமக்கல் மாவட்டம். குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், போலீசார் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கல்லங்காட்டுவலசு, மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி விற்பனை நடப்பது தெரிய வந்தது. நேரில் சென்ற போலீசார், அதே பகுதியை சேர்ந்த பிரபு, 35, ஹரிராஜ், 40, ஆகிய இருவரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News