தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்

சங்கத்தில் 2023 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது

Update: 2024-08-25 08:56 GMT
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்க மதுரை கிளையில் 11ஆவது பேரவை கூட்டம் மதுரையில் நடைபெற்றது தலைவர் கோதண்டராமன் தலைமை தாங்கின கௌரவத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுச்செயலாளர் ராஜகுமார் முன்னிலை வகித்தார் உதவி தலைவர் பரமசிவம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக மதுரை மண்டலம் மேற்பார்வை பொறியாளர் ஆறுமுகம் மதுரை திண்டுக்கல் தேனி வட்ட மேற்பார்வை பொறியாளர் முரளி மனோகர் பேசினர். கூட்டத்தில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது சங்கத்தில் 2023 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டது பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ரூபாய் 16000க்கும் குறைவான அடிப்படை ஓய்வூதியம் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மேலும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. உபதலைவர் ராமர் நன்றி கூறினார். இதில் பொருளாளர் ஜீவானந்தம் உட்பட ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News