போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி ஊத்தங்கரையில் நடைபெற்றது

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி ஊத்தங்கரையில் நடைபெற்றது

Update: 2024-08-25 16:43 GMT
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி ஊத்தங்கரையில் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது பேரணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஊத்தங்கரை கிளை தலைவர் ஷப்பி தலைமை வகித்தார் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் முகமது அயாஸ், மாவட்டச் செயலாளர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலச் செயலாளர் முஷ்ஸின்போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பேரணி அண்ணா நகரில் இருந்து ரவுண்டானாவரை போதை பொருள் எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்திஊர்வலமாக சென்றனர்.பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஊத்தங்கரை துணைத்தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார்.

Similar News