நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலி

குமாரபாளையத்தில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்

Update: 2024-08-26 11:29 GMT
நாமக்கல் மாவட்டம். குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன், 75. இவர் நேற்று காலை 11:40 மணியளவில் அதே பகுதியில் நடந்து சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஹோண்டா டிரீம் வாகன ஓட்டுனர், இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்த போது, இவரை பரிசோத்தித்த டாக்டர் இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News