கெங்கவல்லி அருகே கார் மோதி மின் கம்பம் உடைந்தது

விபத்து

Update: 2024-08-27 15:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே உள்ள கொண்டையம்பள்ளியில் ஒரு கார் கெங்கவல்லி மருத்துவமனைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 74 கிருஷ்ணாபுரத்தில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பத்தை மாற்றி மின்சாரம் வழங்கினர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News